Skip to content

சுஜாதாட்ஸ் – 1

’இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு. அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ! ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.

- கணையாழியின் கடைசிப் பக்கம், டிசம்பர் 1969

2 Comments

  1. Hemamalini wrote:

    What about that Mexico Salavaikkati Joke? who is gonna tell us?

    Saturday, September 12, 2009 at 3:07 am | Permalink
  2. தயாஜி வெள்ளைரோஜா wrote:

    நாங்களும் அந்த Mexico salavaikkari ஜோக்கை இன்னமும் எதிர்ப்பார்த்துதான் இருக்கின்றோம்…. யார் சொல்லுவார்கள்….

    Wednesday, September 23, 2009 at 5:18 am | Permalink

Post a Comment

Your email is never published nor shared. Required fields are marked *
*
*